சங்கீதம் 124
தாவீதின் ஆரோகண பாடல்.
மனிதர்கள் நமக்கு விரோதமாக எழும்பினபோது,
யெகோவா நமது பக்கத்தில் இல்லாவிட்டால்,
யெகோவா தாமே நமது பக்கத்தில் இல்லாவிட்டால்,
அவர்களுடைய கோபம் நம்மேல் எரியும்போது,
நம்மை உயிரோடு விழுங்கியிருப்பார்கள்.
அப்பொழுது தண்ணீர்கள் நம்மேல் பாய்ந்து,
வெள்ளங்கள் நமது ஆத்துமாவின்மேல் பெருகி,
கொந்தளிக்கும் தண்ணீர்கள் நமது ஆத்துமாவின்மேல் புரண்டுபோயிருக்கும்
என்று இஸ்ரவேல் இப்பொழுது சொல்வதாக.
நம்மை அவர்களுடைய பற்களுக்கு இரையாக ஒப்புக்கொடுக்காமல்
இருக்கிற யெகோவாவுக்கு நன்றி.
வேடருடைய கண்ணிக்குத் தப்பின குருவியைப்போல
நம்முடைய ஆத்துமா தப்பினது,
கண்ணி தெறித்தது, நாம் தப்பினோம்.
நம்முடைய உதவி வானத்தையும் பூமியையும் உண்டாக்கின
யெகோவாவுடைய பெயரில் உள்ளது.