சங்கீதம் 126
ஆரோகண பாடல்.
சீயோனின் சிறையிருப்பைக் யெகோவா திருப்பி எருசலேமுக்கு கொண்டு வந்தபோது,
கனவு காண்கிறவர்கள்போல் இருந்தோம்.
அப்பொழுது நம்முடைய வாய் சிரிப்பினாலும்,
நம்முடைய நாவு ஆனந்தசத்தத்தினாலும் நிறைந்திருந்தது;
அப்பொழுது: யெகோவா இவர்களுக்குப் பெரிய காரியங்களைச் செய்தார்
என்று தேசங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள்.
யெகோவா நமக்குப் பெரிய காரியங்களைச் செய்தார்;
இதற்காக நாம் மகிழ்ந்திருக்கிறோம்.
யெகோவாவே,
தெற்கத்திய வெள்ளங்களைத் திருப்புவதுபோல,
எங்களுடைய சிறையிருப்பைத் திருப்பும்.
கண்ணீரோடு விதைக்கிறவர்கள்
கெம்பீரத்தோடு அறுப்பார்கள்.
அள்ளித்தூவும் விதையைச் சுமக்கிறவன் அழுதுகொண்டு போகிறான்;
ஆனாலும் தான் அறுத்த அரிகளைச் சுமந்துகொண்டு
கெம்பீரத்தோடு திரும்பிவருவான்.