சங்கீதம் 134
ஆரோகண பாடல்.
இதோ, இரவுநேரங்களில் யெகோவாவுடைய
ஆலயத்தில் நிற்கும் யெகோவாவின் ஊழியக்காரர்களே,
நீங்களெல்லோரும் யெகோவாவுக்கு நன்றிசெலுத்துங்கள்.
உங்களுடைய கைகளைப் பரிசுத்த இடத்திற்கு நேராக எடுத்து,
யெகோவாவுக்கு நன்றிசெலுத்துங்கள்.
வானத்தையும் பூமியையும் உண்டாக்கின யெகோவா
சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பாராக.