சங்கீதம் 14
இராகத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல்.
தேவன் இல்லை என்று மதிகேடன் தன்னுடைய இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான்.
அவர்கள் தங்களைக்கெடுத்து, அருவருப்பான செயல்களைச் செய்துவருகிறார்கள்;
நன்மைசெய்கிறவன் ஒருவனும் இல்லை.
தேவனைத் தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ என்று பார்க்க,
யெகோவா பரலோகத்திலிருந்து மனிதர்களை கண்ணோக்கினார்.
எல்லோரும் வழிவிலகி, ஒன்றாகக் கெட்டுப்போனார்கள்;
நன்மை செய்கிறவன் இல்லை, ஒருவன்கூட இல்லை.
அக்கிரமக்காரர்களில் ஒருவனுக்கும் அறிவு இல்லையோ?
அப்பத்தை விழுங்குகிறதுபோல, என்னுடைய மக்களை விழுங்குகிறார்களே;
அவர்கள் யெகோவாவை தொழுதுகொள்ளுகிறதில்லை.
அங்கே அவர்கள் மிகவும் பயந்தார்கள்;
தேவன் நீதிமானுடைய சந்ததியோடு இருக்கிறாரே.
ஏழ்மையானவனுக்குக் யெகோவா அடைக்கலமாக இருக்கிறார் என்பதால்,
நீங்கள் அவனுடைய ஆலோசனையை அலட்சியம்செய்தீர்கள்.
சீயோனிலிருந்து இஸ்ரவேலுக்கு இரட்சிப்பு வருவதாக;
யெகோவா தம்முடைய மக்களின் சிறையிருப்பைத் திருப்பும்போது,
யாக்கோபுக்குச் சந்தோஷமும்,
இஸ்ரவேலுக்கு மகிழ்ச்சியும் உண்டாகும்.