சங்கீதம் 140
இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் பாடல்.
யெகோவாவே, பொல்லாத மனிதனுக்கு என்னைத் தப்புவியும்;
கொடுமையுள்ளவனுக்கு என்னை விலக்கி காப்பாற்றும்.
அவர்கள் தங்களுடைய இருதயத்தில் பொல்லாப்புகளைச் சிந்தித்து,
யுத்தஞ்செய்ய நாள்தோறும் கூட்டங்கூடுகிறார்கள்.
பாம்பைப்போல் தங்களுடைய நாவை கூர்மையாக்குகிறார்கள்;
அவர்கள் உதடுகளின்கீழ் விரியன் பாம்பின் விஷம் இருக்கிறது. (சேலா)
யெகோவாவே, துன்மார்க்கனுடைய கைகளுக்கு என்னை நீங்கலாக்கி
கொடியவனுக்கு என்னை விலக்கி காப்பாற்றும்;
அவர்கள் என்னுடைய நடைகளைக் கவிழ்க்கப்பார்க்கிறார்கள்.
பெருமைக்காரர்கள் எனக்குக் கண்ணியையும்
கயிறுகளையும் மறைவாக வைக்கிறார்கள்;
வழியோரத்திலே வலையை விரித்து, எனக்குச் சுருக்குகளை வைக்கிறார்கள். (சேலா)
நான் யெகோவாவை நோக்கி: நீர் என் தேவன் என்றேன்;
யெகோவாவே, என்னுடைய விண்ணப்பங்களின் சத்தத்திற்குச் செவிகொடும்.
ஆண்டவராகிய யெகோவாவே, என்னுடைய இரட்சிப்பின் பெலனே,
யுத்தநாளில் என்னுடைய தலையை மூடினீர்.
யெகோவாவே, துன்மார்க்கனுடைய ஆசைகள் நிறைவேறாதபடிசெய்யும்;
அவன் தன்னை உயர்த்தாதபடி அவனுடைய யோசனையை நடந்தேற விடாமலிரும். (சேலா)
என்னை வளைந்துகொள்ளுகிறவர்களுடைய உதடுகளின் தீவினைகள் அவர்கள் தலைகளையே மூடுவதாக. 10 நெருப்புத்தழல் அவர்கள்மேல் விழுவதாக;
நெருப்பிலும், அவர்கள் எழுந்திருக்கமுடியாத படுகுழிகளிலும் தள்ளப்படுவார்களாக.
11 பொல்லாத நாக்குள்ளவன் பூமியிலே நிலைப்பதில்லை;
கொடுமையான மனிதனை பறக்கடிக்கப் பொல்லாப்பு அவனை வேட்டையாடும்.
12 சிறுமையானவனின் வழக்கையும்,
எளியவர்களின் நியாயத்தையும் யெகோவா விசாரிப்பாரென்று அறிவேன்.
13 நீதிமான்கள் உமது பெயரைத் துதிப்பார்கள்;
செம்மையானவர்கள் உமது சமுகத்தில் வாசம் செய்வார்கள்.