சங்கீதம் 29
தாவீதின் பாடல்.
தேவ பிள்ளைகளே, யெகோவாவுக்கு மகிமையையும் வல்லமையையும் செலுத்துங்கள்;
கர்த்தருக்கே அதைச் செலுத்துங்கள்.
யெகோவாவுடைய பெயருக்கேற்ற மகிமையை அவருக்குச் செலுத்துங்கள்;
பரிசுத்த அலங்காரத்துடனே யெகோவாவை தொழுதுகொள்ளுங்கள்.
யெகோவாவுடைய சத்தம் சமுத்திரங்கள் மேல் தொனிக்கிறது;
மகிமையுள்ள தேவன் முழங்குகிறார்;
யெகோவா திரளான தண்ணீர்களின்மேல் இருக்கிறார்.
யெகோவாவுடைய சத்தம் வல்லமையுள்ளது;
யெகோவாவுடைய சத்தம் மகத்துவமுள்ளது.
யெகோவாவுடைய சத்தம் கேதுருமரங்களை முறிக்கிறது;
யெகோவா லீபனோனின் கேதுருமரங்களை முறிக்கிறார்.
அவைகளைக் கன்றுக்குட்டிகளைப்போலவும், லீபனோனையும்,
சீரியோனையும் காண்டாமிருகக் குட்டிகளைப்போலவும் துள்ளச்செய்கிறார்.
யெகோவாவுடைய சத்தம் தீப்பிழம்புகளைப் பிளக்கும்.
யெகோவாவுடைய சத்தம் வனாந்தரத்தை அதிரச்செய்யும்;
யெகோவா காதேஸ் வனாந்தரத்தை அதிரச்செய்கிறார்.
யெகோவாவுடைய சத்தம் பெண்மான்களை ஈனும்படி செய்து,
காடுகளை வெளியாக்கும்;
அவருடைய ஆலயத்திலுள்ள அனைவரும்
யெகோவாவுக்கு மகிமை என்று ஆர்ப்பரிக்கிறார்கள்.
10 யெகோவா பெருவெள்ளத்தின்மேல் அமர்ந்திருந்தார்;
யெகோவா என்றென்றைக்கும் ராஜாவாக அமர்ந்திருக்கிறார்.
11 யெகோவா தமது மக்களுக்குப் பெலன் கொடுப்பார்;
யெகோவா தமது மக்களுக்குச் சமாதானம் அருளி,
அவர்களை ஆசீர்வதிப்பார்.