சங்கீதம் 54
தாவீது அளித்த பாடல்களில் ஒன்று.
தேவனே, உமது பெயரினிமித்தம் என்னைப் பாதுகாத்து,
உமது வல்லமையினால் எனக்கு நியாயம் செய்யும்.
தேவனே, என்னுடைய விண்ணப்பத்தைக் கேட்டு, என்னுடைய வாயின் வார்த்தைகளைக் கேளும்.
அந்நியர் எனக்கு விரோதமாக எழும்புகிறார்கள்;
கொடியவர்கள் என்னுடைய உயிரை வாங்கத் தேடுகிறார்கள்;
தேவனைத் தங்களுக்கு முன்பாக நிறுத்தி வைப்பதில்லை. (சேலா)
இதோ, தேவன் எனக்கு உதவி செய்பவர்;
ஆண்டவர் என்னுடைய ஆத்துமாவை ஆதரிக்கிறவர்களோடு இருக்கிறார்.
அவர் என்னுடைய எதிரிகளுக்குத் தீமைக்குத் தீமையைச் சரிக்கட்டுவார்,
உமது சத்தியத்திற்காக அவர்களை அழியும்.
உற்சாகத்துடன் நான் உமக்குப் பலியிடுவேன்;
யெகோவாவே, உமது பெயரைத் துதிப்பேன், அது நலமானது.
அவர் எல்லா நெருக்கத்தையும் நீக்கி, என்னை விடுவித்தார்;
என்னுடைய கண் என்னுடைய எதிரிகளில் நீதி சரிக்கட்டுதலைக் கண்டது.