சங்கீதம் 6
செமினீத்தால் நரம்புக் கருவிகளை இசைப்பவர்களின் இராகத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல்.
யெகோவாவே, உம்முடைய கோபத்திலே என்னைக் கடிந்துகொள்ளாமல் இரும்,
உம்முடைய கடுங்கோபத்திலே என்னைத் தண்டியாமல் இரும்.
என்மேல் இரக்கமாக இரும் யெகோவாவே,
நான் பெலனில்லாமல் போனேன்;
என்னைக் குணமாக்கும் யெகோவாவே,
என்னுடைய எலும்புகள் நடுங்குகின்றன.
என்னுடைய ஆத்துமா மிகவும் வியாகுலப்படுகிறது; யெகோவாவே,
எதுவரைக்கும் இரங்காமலிருப்பீர்.
திரும்பும் யெகோவாவே, என்னுடைய ஆத்துமாவை விடுவியும்;
உம்முடைய கிருபையினால் என்னை இரட்சியும்.
மரணத்தில் உம்மை யாரும் நினைவுகூர்வதில்லை,
பாதாளத்தில் உம்மைத் துதிப்பவன் யார்?
என்னுடைய பெருமூச்சினால் இளைத்துப்போனேன்;
இரவுமுழுவதும் என்னுடைய கண்ணீரால் என்னுடைய படுக்கையை மிகவும் ஈரமாக்கி,
என்னுடைய கட்டிலை நனைக்கிறேன்.
துயரத்தினால் என்னுடைய கண் குழி விழுந்துபோனது,
என்னுடைய எதிரிகள் அனைவர் நிமித்தமும் மங்கிப்போனது.
அக்கிரமக்காரர்களே, நீங்கள் எல்லோரும் என்னைவிட்டு அகன்றுபோங்கள்;
யெகோவா என்னுடைய அழுகையின் சத்தத்தைக் கேட்டார்.
யெகோவா என்னுடைய விண்ணப்பத்தைக் கேட்டார்;
யெகோவா என்னுடைய ஜெபத்தை ஏற்றுக்கொள்ளுவார்.
10 என்னுடைய எதிரிகள் எல்லோரும் வெட்கி மிகவும் கலங்கிப்போவார்கள்;
அவர்கள் பின்னாகத் திரும்பி உடனே வெட்கப்படுவார்கள்.