சங்கீதம் 76
அல்தஷ்கேத் என்னும் வாத்தியத்தில் வாசிக்கும்படி பாடலின் இசைத்தலைவனுக்கு ஆசாப் அளித்த பாடல்.
யூதாவில் தேவன் அறியப்பட்டவர்;
இஸ்ரவேலில் அவருடைய பெயர் பெரியது.
சாலேமில் அவருடைய கூடாரமும்,
சீயோனில் அவருடைய தங்குமிடமும் இருக்கிறது.
அங்கேயிருந்து வில்லின் அம்புகளையும்,
கேடகத்தையும், வாளையும், யுத்தத்தையும் முறித்தார். (சேலா)
மகத்துவமுள்ளவரே, கொள்ளையுள்ள மலைளைவிட நீர் பிரகாசமுள்ளவர்.
தைரிய நெஞ்சுள்ளவர்கள் கொள்ளையிடப்பட்டு,
உறங்கி அசந்தார்கள்;
வல்லமையுள்ள எல்லா மனிதர்களுடைய கைகளும் அவர்களுக்கு உதவாமல்போனது.
யாக்கோபின் தேவனே, உம்முடைய அதட்டலின் சத்தத்தினால்
இரதங்களும் குதிரைகளும் உறங்கி விழுந்தது.
நீர், நீரே, பயங்கரமானவர்;
உமது கோபம் எழும்பும்போது உமக்கு முன்பாக நிற்பவன் யார்?
நியாயம் விசாரிக்கவும் பூமியில் சிறுமைப்பட்டவர்கள் யாவரையும் இரட்சிக்கவும்,
தேவனே நீர் எழுந்தருளினபோது,
வானத்திலிருந்து நியாயத்தீர்ப்புக் கேட்கச்செய்தீர்;
பூமி பயந்து அமர்ந்தது. (சேலா)
10 மனிதனுடைய கோபம் உமது மகிமையை விளங்கச்செய்யும்;
மிஞ்சுங்கோபத்தை நீர் அடக்குவீர்.
11 பொருத்தனைசெய்து அதை உங்கள் தேவனாகிய யெகோவாவுக்கு நிறைவேற்றுங்கள்;
அவரைச் சூழ்ந்திருக்கிற அனைவரும் பயங்கரமானவருக்குக் காணிக்கைகளைக் கொண்டுவரவேண்டும்.
12 பிரபுக்களின் ஆவியை அடக்குவார்;
பூமியின் ராஜாக்களுக்கு அவர் பயங்கரமானவர்.