சங்கீதம் 93
யெகோவா ஆளுகை செய்கிறார்,
மாட்சிமையை அணிந்துகொண்டிருக்கிறார்; யெகோவா வல்லமையை அணிந்து,
அவர் அதை வார்க்கச்சையாகக் கட்டிக்கொண்டிருக்கிறார்;
ஆதலால் உலகம் அசையாதபடி நிலைபெற்றிருக்கிறது.
உமது சிங்காசனம் ஆரம்பம்முதல் உறுதியானது;
நீர் என்றென்றும் இருக்கிறீர்.
யெகோவாவே, நதிகள் எழும்பின;
நதிகள் இரைச்சலிட்டு எழும்பின;
நதிகள் அலைதிரண்டு எழும்பின.
திரளான தண்ணீர்களின் இரைச்சலைவிட,
கடலின் வலிமையான அலைகளைவிட, யெகோவா உன்னதத்திலே வல்லமையுள்ளவர்.
உமது சாட்சிகள் மிகவும் உண்மையுள்ளவைகள்;
யெகோவாவே, பரிசுத்தமானது நிரந்தர நாளாக
உமது ஆலயத்தின் அலங்காரமாக இருக்கிறது.