அத்தியாயம் 17
என் ஆவி உடைகிறது*, என் ஆயுசு நாட்கள் முடிகிறது;
கல்லறை எனக்கு ஆயத்தமாயிருக்கிறது.
கேலி செய்கிறவர்கள் என்னிடத்தில் இல்லையோ?
அவர்கள் செய்யும் அநியாயங்களை என் கண் பார்த்துக்கொண்டிருக்கிறது.
தேவரீர் என் காரியத்தை உம்மேல் போட்டுக்கொண்டு,
எனக்காகப் பிணைக்கப்படுவீராக;
வேறே யார் எனக்குக் கைகொடுக்கத்தக்கவர்?
நீர் அவர்கள் இருதயத்திற்கு ஞானத்தை மறைத்தீர்;
ஆகையால் அவர்களை உயர்த்தாதிருப்பீர்.
எவன் தன் நண்பனுக்குக் கேடாகத் துரோகம் பேசுகிறானோ,
அவனுடைய பிள்ளைகளின் கண்களும் பூத்துப்போகும்.
மக்களுக்குள்ளே அவர் என்னைப் பழமொழியாக வைத்தார்;
அவர்கள் முகத்திற்குமுன் நான் விரும்பத்தகாதவனானேன்.
இதற்காக என் கண்கள் வருத்தத்தினால் இருளடைந்தது;
என் உறுப்புகளெல்லாம் நிழலைப்போலிருக்கிறது.
சன்மார்க்கர் இதற்காக அதிர்ச்சியடைவார்கள்;
குற்றமில்லாதவன் மாயக்காரனுக்கு விரோதமாக எழும்புவான்.
நீதிமான் தன் வழியை உறுதியாகப் பிடிப்பான்;
சுத்தமான கைகள் உள்ளவன் மேன்மேலும் பலத்துப்போவான்.
10 இப்போதும் நீங்கள் எல்லோரும் போய்வாருங்கள்;
உங்களில் ஞானமுள்ள ஒருவனையும் காணவில்லை.
11 என் நாட்கள் முடிந்தது;
என் இருதயத்தில் எனக்கு உண்டாயிருந்த சிந்தனைகள் இல்லாமல் போனது.
12 அவைகள் இரவைப் பகலாக்கியது;
இருளை வெளிச்சம் தொடர்ந்துவரும் என்று நினைக்கத்தோன்றியது.
13 அப்படி நான் காத்துக்கொண்டிருந்தாலும்,
பாதாளம் எனக்கு வீடாயிருக்கும்;
இருளில் என் படுக்கையைப் போடுவேன்.
14 அழிவைப்பார்த்து, நீ எனக்குத் தகப்பன் என்கிறேன்;
புழுக்களைப் பார்த்து, நீங்கள் எனக்குத் தாயும் எனக்குச் சகோதரியும் என்கிறேன்.
15 என் நம்பிக்கை இப்போது எங்கே?
நான் நம்பியிருந்ததைக் காண்பவன் யார்?
16 அது பாதாளத்தின் காவலுக்குள் இறங்கும்;
அப்போது தூளில் எங்கும் இளைப்பாறுவோம்” என்றான்.
* அத்தியாயம் 17:1 17:1 என் ஆவி நொறுங்கி விட்டது.