அத்தியாயம் 25
பில்தாதின் வார்த்தைகள்
அப்பொழுது சூகியனான பில்தாத் மறுமொழியாக:
“அதிகாரமும் பயங்கரமும் அவரிடத்தில் இருக்கிறது;
அவர் தமது உன்னதமான இடங்களில் சமாதானத்தை உண்டாக்குகிறார்.
அவருடைய படைகளுக்குத் தொகையுண்டோ?
அவருடைய வெளிச்சம் யார்மேல் உதிக்காமலிருக்கிறது?
இப்படியிருக்க, மனிதன் தேவனுக்கு முன்பாக நீதிமானாயிருப்பது எப்படி?
பெண்ணிடத்தில் பிறந்தவன் சுத்தமாயிருப்பது எப்படி?
சந்திரனை அண்ணாந்துபாரும், அதுவும் பிரகாசிக்காமலிருக்கிறது;
நட்சத்திரங்களும் அவர் பார்வைக்குச் சுத்தமானவைகள் அல்ல.
புழுவாயிருக்கிற மனிதனும், பூச்சியாயிருக்கிற மனுமக்களும் எம்மாத்திரம்” என்றான்.