சங்கீதம் 110
தாவீதின் பாடல்.
யெகோவா என் ஆண்டவரை நோக்கி:
நான் உம்முடைய எதிரிகளை உம்முடைய பாதத்தின்கீழ் போடும்வரைக்கும்,
நீர் என்னுடைய வலதுபக்கத்தில் உட்காரும் என்றார்.
யெகோவா சீயோனிலிருந்து உமது வல்லமையின் செங்கோலை அனுப்புவார்;
நீர் உம்முடைய எதிரிகளின் நடுவே ஆளுகைசெய்யும்.
உமது மகத்துவத்தின் நாளிலே
உம்முடைய மக்கள் மனப்பூர்வமும் பரிசுத்த அலங்காரம் உள்ளவர்களாக இருப்பார்கள்;
அதிகாலையின் கர்ப்பத்தில் பிறக்கும் பனிக்குச் சமமாக உம்முடைய மக்கள் உமக்குப் பிறப்பார்கள்.
நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி
என்றென்றைக்கும் ஆசாரியராக இருக்கிறீர் என்று யெகோவா ஆணையிட்டார்;
மனம் மாறாமலுமிருப்பார்.
உம்முடைய வலதுபக்கத்திலிருக்கிற ஆண்டவர்,
தமது கோபத்தின் நாளிலே ராஜாக்களை வெட்டுவார்.
அவர் தேசங்களுக்குள் நியாயந்தீர்ப்பார்;
எல்லா இடங்களையும் பிரேதங்களால் நிரப்புவார்;
அநேக தேசங்களின்மேல் தலைவர்களாக இருக்கிறவர்களை நொறுக்கிப்போடுவார்.
வழியிலே அவர் நதியில் குடிப்பார்;
ஆகையால் அவர் தமது தலையை எடுப்பார்.