சங்கீதம் 142
குகையிலிருந்த போது தாவீதின் பாடல், ஜெபம்.
யெகோவாவை நோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிடுகிறேன்;
யெகோவாவை நோக்கிச் சத்தமிட்டுக் கெஞ்சுகிறேன்.
அவருக்கு முன்பாக என்னுடைய சஞ்சலத்தை ஊற்றுகிறேன்;
அவருக்கு முன்பாக என்னுடைய நெருக்கத்தை அறிக்கையிடுகிறேன்.
என்னுடைய ஆவி என்னில் தியங்கும்போது,
நீர் என்னுடைய பாதையை அறிந்திருக்கிறீர்;
நான் நடக்கிற வழியில் மறைவாக எனக்குக் கண்ணிவைத்தார்கள்.
வலதுபக்கமாகக் கண்ணோக்கிப் பாரும்,
என்னை அறிவார் ஒருவரும் இல்லை;
எனக்கு அடைக்கலமில்லாமற் போனது;
என்னுடைய ஆத்துமாவை விசாரிப்பார் ஒருவரும் இல்லை.
யெகோவாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்;
நீரே என் அடைக்கலமும்,
உயிருள்ளோர் தேசத்திலே என்னுடைய பங்குமாக இருக்கிறீர் என்றேன்.
என்னுடைய கூக்குரலுக்குச் செவிகொடும்,
நான் மிகவும் தாழ்த்தப்பட்டேன்;
என்னைப் பின்தொடருகிறவர்களுக்கு என்னைத் தப்புவியும்,
அவர்கள் என்னிலும் பலவான்களாக இருக்கிறார்கள்.
உமது பெயரை நான் துதிக்கும்படி,
என்னுடைய ஆத்துமாவைக் காவலுக்கு நீங்கலாக்கிவிடும்;
எனக்கு நீர் தயவு செய்யும்போது
நீதிமான்கள் என்னைச் சூழ்ந்துகொள்ளுவார்கள்.