சங்கீதம் 15
தாவீதின் பாடல்.
யெகோவாவே, யார் உம்முடைய கூடாரத்தில் தங்குவான்?
யார் உம்முடைய பரிசுத்த மலையில் குடியிருப்பான்?
உத்தமனாக நடந்து, நீதியை நடத்தி,
மனதாரச் சத்தியத்தைப் பேசுகிறவன்தானே.
அவன் தன்னுடைய நாவினால் புறங்கூறாமலும்,
தன்னுடைய நண்பனுக்குத் தீங்குசெய்யாமலும்,
தன்னுடைய அயலான்மேல் சொல்லப்படும் அவமானமான பேச்சை எடுக்காமலும் இருக்கிறான்.
ஆகாதவன் அவன் பார்வைக்கு அற்பமானவன்; யெகோவாவுக்குப் பயந்தவர்களையோ மதிக்கிறான்; ஆணையிட்டதில் தனக்கு நஷ்டம் வந்தாலும் தவறாமலிருக்கிறான். தன்னுடைய பணத்தை வட்டிக்குக் கொடுக்காமலும், குற்றமில்லாதவனுக்கு விரோதமாக லஞ்சம் வாங்காமலும் இருக்கிறான். இப்படிச் செய்கிறவன் என்றென்றைக்கும் அசைக்கப்படுவதில்லை.