சங்கீதம் 36
இராகத் தலைவனுக்கு, யெகோவாவுடைய ஊழியனாகிய தாவீது கொடுத்த பாடல்.
துன்மார்க்கனுடைய துரோகப்பேச்சு என் உள்ளத்திற்குத் தெரியும்;
அவன் கண்களுக்குமுன்பு தெய்வபயம் இல்லை.
அவன், தன்னுடைய அக்கிரமம் அருவருப்பானதென்று காணப்படும்வரை,
தன் பார்வைக்கேற்றபடி தனக்குத்தானே வஞ்சகம் பேசுகிறான்.
அவன் வாயின் வார்த்தைகள் அக்கிரமமும் வஞ்சகமுமுள்ளது;
புத்தியாக நடந்துகொள்வதையும் நன்மை செய்வதையும் விட்டுவிட்டான்.
அவன் தன்னுடைய படுக்கையின்மேல் அக்கிரமத்தை யோசித்து,
நல்லது இல்லாத வழியிலே நிலைத்து,
பொல்லாப்பை வெறுக்காமலிருக்கிறான்.
யெகோவாவே, உமது கிருபை வானங்களில் தெரிகிறது;
உமது சத்தியம் மேகமண்டலங்கள்வரை எட்டுகிறது.
உமது நீதி மகத்தான மலைகள் போலவும்,
உமது நியாயங்கள் மகா ஆழமாகவும் இருக்கிறது;
யெகோவாவே, மனிதர்களையும் மிருகங்களையும் காப்பாற்றுகிறீர்.
தேவனே, உம்முடைய கிருபை எவ்வளவு அருமையானது!
அதினால் மனிதர்கள் உமது இறக்கைகளின் நிழலிலே வந்தடைகிறார்கள்.
உமது ஆலயத்திலுள்ள சம்பூரணத்தினால் திருப்தியடைவார்கள்;
உமது பேரின்ப நதியினால் அவர்கள் தாகத்தைத் தீர்க்கிறீர்.
வாழ்வின் ஊற்று உம்மிடத்தில் இருக்கிறது;
உம்முடைய வெளிச்சத்திலே வெளிச்சம் காண்கிறோம்.
10 உம்மை அறிந்தவர்கள்மேல் உமது கிருபையையும்,
செம்மையான இருதயமுள்ளவர்கள்மேல்
உமது நீதியையும் பாராட்டியருளும்.
11 பெருமைக்காரர்களின் கால் என்மேல் வராமலும்,
துன்மார்க்கர்களுடைய கை என்னைப் பறக்கடிக்காமலும் இருப்பதாக.
12 அதோ அக்கிரமக்காரர்கள் விழுந்தார்கள்;
எழுந்திருக்கமுடியாமல் தள்ளப்பட்டுபோனார்கள்.