சங்கீதம் 53
தாவீது அளித்த பாடல்களில் ஒன்று.
தேவன் இல்லை என்று அறிவில்லாதவன் தன்னுடைய இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான்;
அவர்கள் தங்களைக் கெடுத்து,
அருவருப்பான அக்கிரமங்களைச் செய்து வருகிறார்கள்;
நன்மைசெய்கிறவன் ஒருவனும் இல்லை.
தேவனைத் தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ என்று பார்க்க,
தேவன் பரலோகத்திலிருந்து மனிதர்களைக் கண்ணோக்கினார்.
அவர்கள் எல்லோரும் வழிவிலகி, ஒன்றாகக் கெட்டுப்போனார்கள்;
நன்மைசெய்கிறவன் இல்லை, ஒருவன்கூட இல்லை.
அக்கிரமக்காரர்களுக்கு அறிவு இல்லையா?
அப்பத்தை சாப்பிடுகிறதுபோல் என்னுடைய மக்களைச் சாப்பிடுகிறார்களே;
அவர்கள் தேவனைக் கூப்பிடுகிறதில்லை.
உனக்கு விரோதமாக முகாமிடுகிறவனுடைய எலும்புகளைத் தேவன் சிதறடித்ததால்,
பயமில்லாத இடத்தில் மிகவும் பயந்தார்கள்;
தேவன் அவர்களை வெறுத்தபடியினால் நீ அவர்களை வெட்கப்படுத்தினாய்.
சீயோனிலிருந்து இஸ்ரவேலுக்கு இரட்சிப்பு வருவதாக;
தேவன் தம்முடைய மக்களின் சிறையிருப்பைத் திருப்பும்போது,
யாக்கோபுக்குச் சந்தோஷமும் இஸ்ரவேலுக்கு மகிழ்ச்சியும் உண்டாகும்.