சங்கீதம் 75
அல்தஷ்கேத் என்னும் வாத்தியத்தில் வாசிக்கும்படி பாடலின் இசைத்தலைவனுக்கு ஆசாப் அளித்த பாடல்.
உம்மைத் துதிக்கிறோம்,
தேவனே, உம்மைத் துதிக்கிறோம்;
உமது பெயர் அருகில் இருக்கிறதென்று உமது அதிசயமான செயல்கள் அறிவிக்கிறது.
நியமிக்கப்பட்ட காலத்திலே, யதார்த்தமாக நியாயந்தீர்ப்பேன்.
பூமியானது அதின் எல்லாக் குடிமக்களோடும் கரைந்துபோகிறது;
அதின் தூண்களை நான் நிலைநிறுத்துகிறேன். (சேலா)
வீம்புக்காரர்களை நோக்கி, வீம்பு பேசாமலிருங்கள் என்றும்;
துன்மார்க்கர்களை நோக்கி, கொம்பை உயர்த்தாமலிருங்கள் என்றும் சொன்னேன்.
உங்கள் கொம்பை உயரமாக உயர்த்தாமலிருங்கள்;
உயர்ந்த கழுத்துடையவர்களாகப் பேசாமலிருங்கள்.
கிழக்கிலும் மேற்கிலும் வனாந்திரதிசையிலுமிருந்து ஜெயம் வராது.
தேவனே நியாயாதிபதி;
ஒருவனைத் தாழ்த்தி, ஒருவனை உயர்த்துகிறார்.
கலங்கிப் பொங்குகிற மதுபானத்தினால் நிறைந்த பாத்திரம் யெகோவாவுடைய கையிலிருக்கிறது,
அதிலிருந்து ஊற்றுகிறார்;
பூமியிலுள்ள துன்மார்க்கர்கள் அனைவரும் அதின் வண்டல்களை உறிஞ்சிக் குடிப்பார்கள்.
நானோ என்றென்றைக்கும் இதை அறிவித்து,
யாக்கோபின் தேவனைக் புகழ்ந்து பாடுவேன்.
10 துன்மார்க்கர்களுடைய கொம்புகளையெல்லாம் வெட்டிப்போடுவேன்;
நீதிமானுடைய கொம்புகளோ உயர்த்தப்படும்.