சங்கீதம் 84
கீத்தித் என்னும் வாத்தியத்தில் இசைக்கும் இராகத் தலைவனுக்குக் கோராகின் குடும்பம் அளித்த ஒரு துதிப் பாடல்.
சேனைகளின் யெகோவாவே,
உமது வாசஸ்தலங்கள் எவ்வளவு இன்பமானவைகள்!
என்னுடைய ஆத்துமா யெகோவாவுடைய ஆலயமுற்றங்களின்மேல் வாஞ்சையும் ஆவலுமாக இருக்கிறது;
என்னுடைய இருதயமும் என்னுடைய சரீரமும் உயிருள்ள தேவனை நோக்கிக் கெம்பீர சத்தமிடுகிறது.
என்னுடைய ராஜாவும் என் தேவனுமாகிய சேனைகளின் யெகோவாவே,
உம்முடைய பீடங்களின் அருகில் அடைக்கலான் குருவிக்கு வீடும்,
தகைவிலான் குருவிக்குத் தன்னுடைய குஞ்சுகளை வைக்கும் கூடும் கிடைத்ததே.
உம்முடைய வீட்டில் தங்கி இருக்கிறவர்கள் பாக்கியவான்கள்;
அவர்கள் எப்பொழுதும் உம்மைத் துதித்துக்கொண்டிருப்பார்கள் (சேலா)
உம்மிலே பெலன்கொள்ளுகிற மனிதனும்,
தங்களுடைய இருதயங்களில் செவ்வையான வழிகளைக் கொண்டிருக்கிறவர்களும் பாக்கியவான்கள்.
அழுகையின் பள்ளத்தாக்கை உருவ நடந்து அதை நீரூற்றாக்கிக் கொள்ளுகிறார்கள்;
மழையும் குளங்களை நிரப்பும்.
அவர்கள் பலத்தின்மேல் பலம் அடைந்து,
சீயோனிலே தேவசந்நிதியில் வந்து காணப்படுவார்கள்.
சேனைகளின் தேவனாகிய யெகோவாவே,
என்னுடைய விண்ணப்பத்தைக் கேளும்;
யாக்கோபின் தேவனே, செவிகொடும். (சேலா)
எங்கள் கேடகமாகிய தேவனே, கண்ணோக்கமாக இரும்;
நீர் அபிஷேகம் செய்தவரின் முகத்தைப் பாரும்.
10 ஆயிரம் நாளைவிட உமது முற்றங்களில் செல்லும் ஒரே நாள் நல்லது;
துன்மார்க்கர்களின் கூடாரங்களில் தங்கியிருப்பதைவிட
என் தேவனுடைய ஆலயத்தின் வாசற்படியில் காத்திருப்பதையே தெரிந்துகொள்ளுவேன்.
11 தேவனாகிய யெகோவா சூரியனும் கேடகமுமானவர்;
யெகோவா கிருபையையும் மகிமையையும் அருளுவார்;
உத்தமமாக நடக்கிறவர்களுக்கு நன்மையை வழங்காமல் இருக்கமாட்டார்.
12 சேனைகளின் யெகோவாவே,
உம்மை நம்பியிருக்கிற மனிதன் பாக்கியவான்.