எபிரெயர்
ஆசிரியர்
எபிரெயர்களுக்கு எழுதிய கடிதத்தின் எழுத்தாளர் யார் என்பது இன்னும் இரகசியமாக இருக்கிறது. சில அறிஞர்கள் பவுல்தான் இந்த நிருபத்தின் ஆசிரியர் என்று கருதுகின்றனர். ஆனால் உண்மையான எழுத்தாளர் யார் என்பது புதிராகவே இருக்கிறது. கிறிஸ்தவத்தின் பிரதான ஆசாரியராக, ஆரோனின் ஆசாரியத்துவத்திற்கு மேலானவராகவும், நியாயப்பிரமாணத்திலும் தீர்க்கதரிசனங்களிடமிருந்தும் கிறிஸ்துவை வரையறுக்கிற வேறு புத்தகம் இல்லை. இந்த புத்தகம், கிறிஸ்துவை நம் விசுவாசத்தைத் துவக்குபவராகவும் முழுமையாக்குபவராகவும் வெளிப்படுத்துகிறது (எபிரெயர் 12: 2).
எழுதப்பட்ட காலம் மற்றும் இடம்
ஏறக்குறைய 1 கிபி 64-70 க்கு இடையே எழுதப்பட்டது.
எபிரேயருக்கு எழுதப்பட்ட கடிதம் எருசலேமில் எழுதப்பட்டது, கிறிஸ்து பரலோகத்திற்கு சென்ற சில காலத்திற்குப் பிறகு, எருசலேமின் அழிவிற்கு சில நாட்களுக்கு முன்பு ஆகிய இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டது.
யாருக்காக எழுதப்பட்டது
பழைய ஏற்பாட்டை அறிந்திருந்த மனந்திரும்பிய யூதர்களுக்கு இந்த கடிதம் முதன்மையாக எழுதப்பட்டது. அவர்கள் யூத மதத்திற்குத் திரும்புவதற்கு அல்லது யூத சுவிசேஷத்தைத் திரும்ப சோதிக்கப்பட்டார்கள். விசுவாசிகளுக்குக் கீழ்ப்படிந்த பல ஆசாரியர்களிடமிருந்து பெற்றவர்கள் (அப். 6: 7) இருந்து வந்தார்கள் என்பதையும் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
எழுதப்பட்ட நோக்கம்
உள்ளூர் யூத போதனைகளை நிராகரிக்கவும், இயேசுவுக்கு தொடர்ந்து உண்மையாக இருக்கவும், இயேசு கிறிஸ்து மேன்மையானவர் என்பதைக் காட்டவும், அவர், தேவதூதர்கள், ஆசாரியர்கள், பழைய ஏற்பாட்டுத் தலைவர்கள், அல்லது எந்த மதம் ஆகியவற்றைக் காட்டிலும் தேவனுடைய குமாரன் சிறந்தவர் என்பதைக் காட்டும்படி எபிரெயர் நிருபத்தை எழுதியவர், அவருடைய சபையாரை ஊக்கப்படுத்த எழுதினார். கிறிஸ்து சிலுவையில் இறந்து உயிர்த்தெழுப்பப்படுவதன் மூலம், விசுவாசிகளின் இரட்சிப்பு மற்றும் நித்திய ஜீவனை உறுதிப்படுத்துகிறார், நம்முடைய பாவங்களுக்காக கிறிஸ்து செலுத்திய தியாக பலியானது, பூரணமானது மற்றும் முழுமையானது ஆகும். விசுவாசமானது தேவனைப் பிரியப்படுத்துகிறது, நாம் தேவனுக்குக் கீழ்ப்படிதல் மூலம் விசுவாசத்தை வெளிப்படுத்துகிறோம்.
மையக் கருத்து
கிறிஸ்துவின் மேன்மை
பொருளடக்கம்
1. இயேசு கிறிஸ்து தேவதூதர்களை விட உயர்ந்தவர் — 1:1-2:18
2. இயேசு, நியாயப்பிரமாணம் மற்றும் பழைய உடன்படிக்கைக்கு மேலானவர் — 3:1-10:18
3. விசுவாசம் மற்றும் சோதனைகள் மூலம் சகிப்புக்கு ஒரு அழைப்பு — 10:19-12:29
4. இறுதி அறிவுரைகள் மற்றும் வாழ்த்துக்கள் — 13:1-25
அத்தியாயம் 1
தீர்க்கதரிசிகளிலும் மேலானவர்
முற்காலத்தில் வெவ்வேறு காலங்களில், அநேக விதங்களில் தீர்க்கதரிசிகள் மூலமாக முற்பிதாக்களோடு பேசின தேவன், இந்தக் கடைசிநாட்களில் குமாரன் மூலமாக நம்மோடு பேசினார்; இவரை எல்லாவற்றிற்கும் வாரிசாக நியமித்தார், இவர் மூலமாக உலகங்களையும் உண்டாக்கினார். இவர் பிதாவுடைய மகிமையின் பிரகாசமும், அவருடைய குணத்தின் சாயலாகவும் இருந்து, எல்லாவற்றையும் தம்முடைய வல்லமையுள்ள வசனத்தினாலே தாங்குகிறவராக, அவர்தாமே நம்முடைய பாவங்களை நீக்கும் சுத்திகரிப்பை உண்டுபண்ணி, உன்னதத்திலுள்ள மகத்துவமானவருடைய வலதுபக்கத்தில் உட்கார்ந்தார். இவர் தேவதூதர்களைவிட எவ்வளவு விசேஷமான நாமத்தைச் சுதந்தரித்துக்கொண்டாரோ, அவ்வளவு அதிகமாக அவர்களைவிட மேன்மையுள்ளவரானார். எப்படியென்றால், நீர் என்னுடைய நேசகுமாரன், இன்று நான் உம் தகப்பனானேன் என்றும்; நான் அவருக்குப் பிதாவாக இருப்பேன், அவர் எனக்குக் குமாரனாக இருப்பார் என்றும், அவர் தூதர்களில் யாருக்காவது எப்போதாவது சொன்னது உண்டா? மேலும், தமது முதற்பேறானவரை உலகத்தில் பிரவேசிக்கச்செய்தபோது: தேவதூதர்கள் எல்லோரும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார். தேவதூதர்களைப்பற்றி: தம்முடைய தூதர்களைக் காற்றுகளாகவும், தம்முடைய ஊழியக்காரர்களை அக்கினிஜூவாலைகளாகவும் செய்கிறார் என்று சொல்லியிருக்கிறது. குமாரனைப்பற்றி: தேவனே, உம்முடைய சிங்காசனம் என்றென்றைக்கும் உள்ளது, உம்முடைய ராஜ்யத்தின் செங்கோல் நீதியுள்ள செங்கோலாக இருக்கிறது. நீர் நீதியை விரும்பி, அக்கிரமத்தை வெறுத்திருக்கிறீர்; எனவே, தேவனே, உம்முடைய தேவன், உமது தோழர்களைவிட உம்மை ஆனந்தத் தைலத்தினால் அபிஷேகம்பண்ணினார் என்றும்; 10 கர்த்தாவே, நீர் ஆரம்பத்திலே பூமியை அஸ்திபாரப்படுத்தினீர்; வானங்கள் உம்முடைய கைவேலைகளாக இருக்கிறது; 11 அவைகள் அழிந்துபோகும்; நீரோ நிலைத்திருப்பீர்; அவைகள் எல்லாம் ஆடைபோலப் பழைமையாகப்போகும்; 12 ஒரு சால்வையைப்போல அவைகளைச் சுருட்டுவீர், அப்பொழுது அவைகள் மாறிப்போகும்; ஆனால், நீரோ மாறாதவராக இருக்கிறீர், உம்முடைய ஆண்டுகள் முடிந்து போவதில்லை என்றும் சொல்லியிருக்கிறது. 13 மேலும், நான் உம்முடைய எதிரிகளை உமது பாதத்தின் கீழே போடும்வரை நீர் என்னுடைய வலதுபக்கத்தில் உட்கார்ந்திரும் என்று தூதர்களில் யாருக்காவது எப்போதாவது அவர் சொன்னதுண்டா? 14 அவர்கள் எல்லோரும், இரட்சிப்பைச் சுதந்தரிக்கப்போகிறவர்களுக்காக ஊழியம் செய்வதற்கு அனுப்பப்பட்ட பணிவிடை செய்யும் ஆவிகளாக இருக்கிறார்கள் அல்லவா?