யோவேல்
ஆசிரியர்
யோவேல் தான் இதன் ஆசிரியர் என்று இந்த புத்தகத்தில் எழிதியுள்ளது (யோவேல் 1:1). இந்த புத்தகத்தில் சொல்லப்பட்டக் காரியத்தை தவிர வேறு காரியங்கள் இந்த தீர்க்கதரிசியைக் குறித்து அதிகமாக அறியப்படவில்லை. பெத்துவேலின் குமாரன் என்று தன்னை அறியப்படுத்துகிறான், யூத ஜனங்களுக்கு பிரசங்கித்தான், எருசலேமைக்குறித்து அதிகமாக சொல்லுகிறான். யூதாவில் உள்ள ஆலயத்தின் காரியங்களைக்குறித்தும் ஆசாரியர்களைக் குறித்தும், அதிகம் அறிந்தவனாக இருந்தான். (யோவேல் 1:13-14; 2:14, 17).
எழுதப்பட்ட காலம் மற்றும் இடம்
ஏறக்குறைய கிமு 835 க்கும் 600 க்கும். இடையில் எழுதப்பட்டது.
பெர்சியா சாம்ராஜ்ஜியத்தின் காலத்தில் வாழ்ந்தவன் என்று கருதப்படுகிறது. பெர்சியரின் காலத்தில் சில யூதர்கள் எருசலேமுக்கு திரும்பிவர அனுமதிக்கப்பட்டார்கள், அவர்கள் ஆலயத்தைக் கட்டத்தொடங்கினார்கள். யோவேல் ஆலயக்காரியத்தைக் குறித்து நான்கு அறிந்தவனாய் இருந்தான்.
ஆகையால் இஸ்ரவேலர் சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்த பிறகு எழுதப்பட்டு இருக்கலாம்.
யாருக்காக எழுதப்பட்டது
இஸ்ரவேலர்களுக்கும் வேதத்தை வாசிப்பவர்களுக்கும் எழுதப்பட்டது.
எழுதப்பட்ட நோக்கம்
தேவன் இரக்கம் உள்ளவர், மனம்திரும்பினவர்களுக்கு தேவன் மன்னிப்பு அளிக்கிறார் இரண்டு காரியங்களை சிறப்பம்சங்களாக இந்த புத்தகம் வர்ணிக்கிறது. ஒன்று வெட்டுகிளிகளின் படையெடுப்பும், இரண்டு பரிசுத்த ஆவியின் ஊற்றப்படுதலும் ஆகும். இதின் நிறைவேறுதல் அப்போஸ்தலர் 2 ஆம் அதிகாரத்தில் பெந்தெகொஸ்தே நாளில் நடந்தது.
மையக் கருத்து
கர்த்தருடைய நாள்
பொருளடக்கம்
1. இஸ்ரவேல் வெட்டுகிளிகளால் சூழப்பட்டது — 1:1-20
2. தேவனின் தண்டனை — 2:1-17
3. இஸ்ரவேல் மறுபடியும் நாட்டப்பட்டது — 2:18-32
4. இஸ்ரவேல் மக்கள் வாழ்ந்த தேசங்களின் நியாயத்தீர்ப்பு — 3:1-21
அத்தியாயம் 1
யோவேலுக்கு கொடுக்கப்பட்ட யெகோவாவுடைய வசனம்
பெத்துவேலின் மகனாகிய யோவேலுக்கு கொடுக்கப்பட்ட யெகோவாவுடைய வசனம். முதியோர்களே, இதைக் கேளுங்கள்; தேசத்தின் அனைத்துக் குடிமக்களே, செவிகொடுங்கள்; உங்கள் நாட்களிலாவது உங்கள் முன்னோர்களின் நாட்களிலாவது இப்படிப்பட்டது சம்பவித்ததுண்டா? இந்தச் செய்தியை உங்கள் பிள்ளைகளுக்குத் தெரிவியுங்கள்; இதை உங்களுடைய பிள்ளைகள் தங்கள் பிள்ளைகளுக்கும், அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கும் சந்ததியாருக்கும் தெரிவிப்பார்களாக. பச்சைப்புழு விட்டதை வெட்டுக்கிளி தின்றது; வெட்டுக்கிளி விட்டதைப் பச்சைக்கிளி தின்றது; பச்சைக்கிளி விட்டதை முசுக்கட்டைப்பூச்சி தின்றது. மது வெறியர்களே, விழித்து அழுங்கள்; திராட்சைரசம் குடிக்கிற அனைத்து மக்களே, புது திராட்சைரசத்திற்காக அலறுங்கள்; அது உங்கள் வாயிலிருந்து அகற்றப்பட்டது. எண்ணிமுடியாத ஒரு பெரும் மக்கள்கூட்டம்* 1:6 வெட்டுக்கிளி சேனை என் தேசத்தின்மேல் வருகிறது; அதின் பற்கள் சிங்கத்தின் பற்கள்; கொடிய சிங்கத்தின் கடைவாய்ப்பற்கள் 1:6 பார்க்க. வெளி. 9:7-10 அதற்கு உண்டு. அது என் திராட்சைச்செடியை அழித்து, என் அத்திமரத்தை உரித்து, அதின் பட்டையை முழுவதும் தின்றுபோட்டது; அதின் கிளைகள் வெண்மையாயிற்று. தன் இளவயதின் கணவனுக்காக சணல் ஆடையை அணிந்திருக்கிற பெண்ணைப்போலப் புலம்பும். உணவுபலியும் பானபலியும் யெகோவாவுடைய ஆலயத்தை விட்டு அகன்றுபோனது; யெகோவாவின் ஊழியக்காரர்களாகிய ஆசாரியர்கள் துக்கப்படுகிறார்கள். 10 வயல்வெளி பாழானது, பூமி துக்கம் 1:10 காய்ந்து போயிற்று கொண்டாடுகிறது; விளைச்சல் அழிக்கப்பட்டது; புது திராட்சைரசம் வற்றிப்போனது; எண்ணெய் தீர்ந்துபோனது. 11 பயிரிடும் குடிமக்களே, வெட்கப்படுங்கள்; கோதுமையும், வாற்கோதுமையும் இல்லாமற்போனது; திராட்சைத்தோட்டக்காரர்களே, அலறுங்கள்; வயல்வெளியின் அறுப்பு அழிந்துபோனது. 12 திராட்சைச்செடி வதங்கி, அத்திமரம் சாரமற்றுப்போகிறது; மாதுளை, பேரீச்சம், கிச்சிலி முதலிய தோட்டத்தின் செடிகள் எல்லாம் வாடிப்போனது; சந்தோஷம் மனுக்குலத்தைவிட்டு ஒழிந்துபோனது.
தேசத்திற்காகப் புலம்புதல்
13 ஆசாரியர்களே, சணல் ஆடையை அணிந்து புலம்புங்கள்; பலிபீடத்தின் பணிவிடைக்காரர்களே, அலறுங்கள்; என் தேவனுடைய ஊழியக்காரர்களே, நீங்கள் உள்ளே நுழைந்து சணல் ஆடையை அணிந்தவர்களாக இரவு தங்குங்கள். உங்கள் தேவனுடைய ஆலயத்தில் உணவுபலியும் பானபலியும் செலுத்தப்படாமல் நிறுத்தப்பட்டது. 14 பரிசுத்த உபவாசநாளை ஏற்படுத்துங்கள்; விசேஷித்த ஆசரிப்பை அறிவியுங்கள்; மூப்பர்களையும் தேசத்தின் எல்லா குடிமக்களையும், உங்கள் தேவனாகிய யெகோவாவின் ஆலயத்திலே கூடிவரச்செய்து யெகோவாவை நோக்கிக் கூப்பிடுங்கள். 15 அந்த பயங்கரமான நாளுக்காக ஐயோ, யெகோவாவுடைய நியயதீர்ப்பின் நாள், சமீபமாயிருக்கிறது; அது அழிவைப்போல சர்வ வல்ல தேவனிடத்திலிருந்து வருகிறது. 16 நம்முடைய கண்களைவிட்டு ஆகாரமும், நம்முடைய தேவனின் ஆலயத்தைவிட்டுச் சந்தோஷமும் மகிழ்ச்சியும் நீக்கப்படவில்லையோ? 17 விதையானது மண்கட்டிகளின் கீழ் மக்கிப்போனது; பயிர் காய்ந்துபோகிறதினால் கிடங்குகள் பாழாகிக் களஞ்சியங்கள் இடிந்துபோனது. 18 மிருகங்கள் எவ்வளவாகத் தவிக்கிறது; மாட்டுமந்தைகள் தங்களுக்கு மேய்ச்சல் இல்லாததினால் கலங்குகிறது; ஆட்டுமந்தைகளும் சேதமானது. 19 யெகோவாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; நெருப்பு வனாந்திரத்தின் மேய்ச்சல்களை அழித்தது, நெருப்புத்தழல் தோட்டத்தின் மரங்களையெல்லாம் எரித்துப்போடுகிறது. 20 வெளியின் மிருகங்களும் உம்மை நோக்கிக் கதறுகிறது; நதிகளில் தண்ணீரெல்லாம் வற்றிப்போனது; நெருப்பு வனாந்திரத்தின் மேய்ச்சல்களை அழித்துப்போட்டது.

*அத்தியாயம் 1:6 1:6 வெட்டுக்கிளி சேனை

அத்தியாயம் 1:6 1:6 பார்க்க. வெளி. 9:7-10

அத்தியாயம் 1:10 1:10 காய்ந்து போயிற்று