சங்கீதம் 113
அல்லேலூயா, யெகோவாவுடைய ஊழியக்காரர்களே, துதியுங்கள்;
யெகோவாவுடைய பெயரைத் துதியுங்கள்.
இதுமுதல் என்றென்றைக்கும் யெகோவாவுடைய பெயர் ஸ்தோத்திரிக்கப்படுவதாக.
சூரியன் உதிக்கும் திசைதொடங்கி
அது மறையும் திசைவரை யெகோவாவுடைய பெயர் துதிக்கப்படட்டும்.
யெகோவா எல்லா தேசங்கள்மேலும் உயர்ந்தவர்;
அவருடைய மகிமை வானங்களுக்கு மேலானது.
உன்னதங்களில் வாழ்கிற நம்முடைய தேவனாகிய யெகோவாவுக்குச் சமமானமானவர் யார்?
அவர் வானத்திலிருந்து பூமியிலுமுள்ளவைகளைப் பார்க்கும்படி தம்மைத் தாழ்த்துகிறார்.
அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து தூக்கிவிடுகிறார்;
ஏழ்மையானவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்.
அவனைப் பிரபுக்களோடும்,
தமது மக்களின் அதிபதிகளோடும் உட்காரச்செய்கிறார்.
மலடியைச் சந்தோஷமான பிள்ளைத்தாய்ச்சியாக்கி,
வீட்டிலே குடியிருக்கச்செய்கிறார்.
அல்லேலூயா.