சங்கீதம் 114
இஸ்ரவேல் எகிப்திலும், யாக்கோபின் வீட்டார் அந்நிய மக்களிடமிருந்து புறப்பட்டபோது,
யூதா அவருக்குப் பரிசுத்த இடமும்,
இஸ்ரவேல் அவருக்கு இராஜ்ஜியமுமானது.
கடல் கண்டு விலகி ஓடினது;
யோர்தான் பின்னிட்டுத் திரும்பினது.
மலைகள் ஆட்டுக்கடாக்களைப்போலவும்,
குன்றுகள் ஆட்டுக்குட்டிகளைப்போலவும் துள்ளினது.
கடலே, நீ விலகியோடுகிறதற்கும்;
யோர்தானே, நீ பின்னாக திரும்புகிறதற்கும்;
மலைகளே, நீங்கள் ஆட்டுக்கடாக்களைப்போலவும்; குன்றுகளே,
நீங்கள் ஆட்டுக்குட்டிகளைப்போலவும் துள்ளுகிறதற்கும்,
உங்களுக்கு என்ன வந்தது?
பூமியே, நீ ஆண்டவருக்கு முன்பாகவும்,
யாக்கோபுடைய தேவனுக்கு முன்பாகவும் அதிரு.
அவர் கன்மலையைத் தண்ணீர் குளமாகவும்,
கற்பாறையை நீரூற்றுகளாகவும் மாற்றுகிறார்.