சங்கீதம் 64
இராகத் தலைவனுக்கு தாவீதின் பாடல்.
தேவனே, என்னுடைய விண்ணப்பத்தில் என்னுடைய சத்தத்தைக் கேட்டருளும்;
எதிரியால் வரும் பயத்தை நீக்கி, என்னுடைய உயிரை காத்தருளும்.
துன்மார்க்கர் செய்யும் இரகசிய ஆலோசனைக்கும்,
அக்கிரமக்காரர்களுடைய கலகத்திற்கும் என்னை விலக்கி மறைத்தருளும்.
அவர்கள் தங்களுடைய நாவை வாளைப்போல் கூர்மையாக்கி,
மறைவுகளில் உத்தமன்மேல் எய்வதற்காக கசப்பான வார்த்தைகளாகிய தங்களுடைய அம்புகளை நாணேற்றுகிறார்கள்;
சற்றும் பயமின்றி திடீரென்று அவன்மேல் எய்கிறார்கள்.
அவர்கள் பொல்லாத காரியத்தில் தங்களை உறுதிப்படுத்திக்கொண்டு,
மறைவான கண்ணிகளை வைக்க ஆலோசனைசெய்து,
அவைகளைக் காண்பவன் யார் என்கிறார்கள்.
அவர்களுடைய நியாயக்கேடுகளை ஆராய்ந்துதேடி,
தந்திரமான யோசனை நிறைவேறும்படி முயற்சி செய்கிறார்கள்;
அவர்களில் ஒவ்வொருவனுடைய உட்கருத்தும் இருதயமும் ஆழமாக இருக்கிறது.
ஆனாலும் தேவன் அவர்கள்மேல் அம்புகளை எய்வார்,
திடீரென்று அவர்கள் காயப்படுவார்கள்.
அவர்கள் தள்ளப்பட்டு, கீழே விழும்படி
அவர்கள் நாவுகளே அவர்களைக் கெடுக்கும்;
அவர்களைக் காண்கிற அனைவரும் ஓடிப்போவார்கள்.
எல்லா மனிதரும் பயந்து, தேவனுடைய செயலை அறிவித்து,
அவர் செய்கையை உணர்ந்துகொள்வார்கள்.
10 நீதிமான் யெகோவாவுக்குள் மகிழ்ந்து, அவரை நம்புவான்;
செம்மையான இருதயமுள்ளவர்கள் அனைவரும் மேன்மைபாராட்டுவார்கள்.